Homeசெய்திகள்இந்தியாவிவசாய பிரதிநிதிகளை சந்திக்கிறார் - ராகுல்

விவசாய பிரதிநிதிகளை சந்திக்கிறார் – ராகுல்

-

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விவசாய சங்க தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.

விவசாய பிரதிநிதிகளை சந்திக்கிறார் - ராகுல்இன்று காலை, ராகுலின் அலுவலகத்தில் நடக்கும் இந்த சந்திப்பில் 7 விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற தனிநபர் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்யும்படி அவர்கள் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.

கடந்த திங்கட்கிழமை நிருபர்களை சந்தித்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர்கள், நாடு முழுவதும் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும்.

குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதத்தை சட்டப்பூர்வமாக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதிய போராட்டங்கள் நடத்தப்படும். லோக்சபாவில், தனிநபர் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி பேரணி நடத்தப்படும் என அறிவித்த விவசாயிகள், ஆகஸ்ட்-15 அன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

MUST READ