எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% ஊக்கத்தொகை”- தமிழக அரசு அறிவிப்பு!
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (நவ.09) உத்தரவுப் பிறப்பித்தது.
அதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து தீர்ப்பது தொடர்பான விசாரணை நீதிமன்றங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை உருவாக்குவது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளைத் திறன்படக் கண்காணித்துத் தீர்ப்பதற்கு, தானாக முன்வந்து வழக்குகளைப் பதிவுச் செய்யுமாறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிராக தடை விதிக்கப்பட்டிருக்கும் வழக்குகளை மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், சிறப்பு நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பை ஒவ்வொரு மாவட்ட முதன்மை நீதிபதிகளும் உறுதிச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
பாத யாத்திரையின் இடையே பரோட்டா சுட்ட அண்ணாமலை!
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளின் நிலவரத்தை அறிய, உயர்நீதிமன்றங்கள் இணையதளத்தில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இத்தகைய வழக்குகளை விசாரிக்கக் கூடுதலாக சிறப்பு அமர்வுகளை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.