Homeசெய்திகள்இந்தியாபுதுடெல்லி : அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டம்

புதுடெல்லி : அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டம்

-

புதுடெல்லி : அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டம்அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டங்கள் புதுடெல்லியில் இன்று நடைபெற இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியிலும், 4-வது அகில இந்திய அலுவல் மொழி சம்மேளனத்தின் தொடக்க அமர்விலும் உரையாற்றவிருக்கிறார்.

புதுடெல்லி : அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டம்இந்தி அலுவல் மொழியாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 14, 15 ஆகிய இரு தினங்களும் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 4வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு நடைபெற உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ மொழித் துறை இதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளது.

இவ்விழாவின்போது, ‘ராஜ்பாஷா பாரதி’ இதழின் வைரவிழா சிறப்பு வெளியீட்டை மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட உள்ளார். வைர விழாவை முன்னிட்டு, அஞ்சல் தலையையும், நாணயத்தையும் அமித் ஷா வெளியிட உள்ளார். ராஜ்பாஷா கவுரவ், ராஜ்பாஷா கீர்த்தி விருதுகளையும் அமித் ஷா வழங்க உள்ளார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் நித்யானந்த் ராய், பண்டி சஞ்சய் குமார், நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் துணைத் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப், குழுவின் இதர உறுப்பினர்கள், மத்திய அரசின் செயலாளர்கள், பல்வேறு வங்கிகள் பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தென்னிந்தியாவைச் சேர்ந்த இரண்டு இந்தி அறிஞர்கள், ஆகியோர் தொடக்க அமர்வில் கலந்து கொள்வார்கள் என தெரிய வருகிறது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள் – அமித் ஷா

இரண்டு நாள் மாநாட்டில் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ