Homeசெய்திகள்இந்தியாகெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் - ஒருவர் கைது

கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் – ஒருவர் கைது

-

கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் – ஒருவர் கைது

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் விடுத்த விவகாரம், அங்கித் கோயல் (33) என்பவரை கைது செய்தது டெல்லி காவல்துறை.

கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் - ஒருவர் கைது

செவ்வாயன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்து மெட்ரோ நிலையங்களில் சுவரெழுத்து மூலம் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த டெல்லி காவல்துறை, சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆய்வு செய்ததில் அங்கித் கோயல் (33) என்ற நபரை கைது செய்துள்ளது.

முதல்வருக்கு எதிராக கொலைமிரட்டல் விடுக்கும் விதம் மெட்ரோ ரயில்களுக்குள்ளும், ரயில் நிலையங்களிலும் சுவரொட்டிகள் எழுதப்பட்டிருந்தது. ஆம் ஆத்மி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தது.

கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் - ஒருவர் கைது

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சைன்போர்டுகளில் ஒரு இளைஞர் சுவரெழுத்துக்களை எழுதுவது தெரியவந்தது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த நபர் பகிர்ந்துள்ளதாக காவல்துறை கண்டறிந்தது.

படேல் நகர், ரமேஷ் நகர் மற்றும் ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையங்களில் இவ்வாறு முதல்வருக்கு எதிராக அவர் சுவரெழுத்துக்கள் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், கெஜ்ரிவால், டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.

கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் - ஒருவர் கைது

இதையடுத்து இதற்க்கு பின்னால் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி ஆம் ஆத்மி கட்சி இந்த விவகாரம் தொடர்பாக புகாரளிக்க தேர்தல் ஆணையத்திடம் நேரம் கோரியது. இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி சம்பந்தப்பட்ட நபரை டெல்லி காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

MUST READ