Homeசெய்திகள்இந்தியாஇஸ்ரோ விஞ்ஞானிகளின் அசாதாரண சாதனையை நாடே பாராட்டுகிறது - பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரோ விஞ்ஞானிகளின் அசாதாரண சாதனையை நாடே பாராட்டுகிறது – பிரதமர் மோடி வாழ்த்து

-

- Advertisement -

Modi

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் 02- ஆம் தேதி ஆதித்யா L1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. ஆதித்யா விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் L1 புள்ளியை நோக்கிப் பயணித்து வந்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா L1 ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆதித்யா L1 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது. எல்-1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட புள்ளியை குறிக்கும் லாக்ரேஞ்ச் பாயிண்ட் என்ற இடமாகும். எல்-1 என்ற இடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆராய முடியும். இதனை தொடர்ந்து ஆதித்யா L1 விண்கலம் சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில், சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தியதன் மூலம் இந்தியா மற்றுமொரு சாதனை படைத்துள்ளது. இந்திய விஞ்ஞானிகளின் தொடர் அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டு இது. மிகவும் சிக்கலான, நுணுக்கமான சாதனையை படைத்துள்ளது இஸ்ரோ. இஸ்ரோ விஞ்ஞானிகளின் அசாதாரண சாதனையை நாடே பாராட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ