Homeசெய்திகள்இந்தியாவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை!

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை!

-

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு - சோனியா

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி காலை முதலே முன்னிலையில் உள்ளார்.

18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. 96 கோடி வாக்காளர்களில் 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி காலை முதலே முன்னிலையில் உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிட்டார். இந்த நிலையில், பிரதமர் மோடி காலை முதலே முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் பின்னடைவை சந்தித்துள்ளார்.

MUST READ