Homeசெய்திகள்இந்தியா"எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது"- காங்கிரஸைக் கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி!

“எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது”- காங்கிரஸைக் கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி!

-

 

"எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது"- காங்கிரஸைக் கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி!

“எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது என நானே கவலைப்படுகிறேன்” என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ரூ.4 கோடி சம்பளம் கேட்டேனா?…. நடிகை ராஷ்மிகா விளக்கம்…

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பா.ஜ.க. 400 இடங்களில் ஜெயிக்க மல்லிகார்ஜுன கார்கே ஆசிர்வாதம் வழங்கியுள்ளார். நாட்டின் 75- வது குடியரசுத் தினக் கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. எங்கள் பேச்சைக் கேட்கக் கூடாது எனத் திட்டமிட்டே நீங்கள் வந்திருக்கிறீர்கள்.

நான் பேசுவதற்கு மக்கள் எனக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ் கட்சி இப்படி ஆகிவிட்டதே என நானே கவலைப்படுகிறேன். வரும் மக்களவைத் தேர்தலில் 40 முதல் 50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தடைகளை தாண்டி ஓடிடி தளத்திற்கு வருகிறது தி கேரளா ஸ்டோரி

பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியைத் தாக்கி சில வார்த்தைகள் பேசியதற்கு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் காட்சியைக் கிண்டல் செய்ததற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.

MUST READ