Homeசெய்திகள்இந்தியாஇந்திய தேர்தல் ஆணையத்தின் பரப்புரைத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் பரப்புரைத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!

-

 

இந்திய தேர்தல் ஆணையத்தின் பரப்புரைத் தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

‘காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அறிவிப்பு!’

சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் விளம்பரங்கள், பரப்புரைகளை மேற்கொள்ள சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.

“விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்”- இஸ்ரோ அதிரடி அறிவிப்பு!

கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் பரப்புரைத் தூதர்களாக இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, குத்துச் சண்டை வீராங்கனை மேரிக்கோம், நடிகர் அமீர்கான் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ