உத்திரபிரதேசத்தில் மாநிலம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் எம்பியும் பிரபல ரவுடியுமான ஆதி அகமது மற்றும் அவரது சகோதரரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து உத்திரப்பிரதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் ஆதிக் அவரது கூட்டாளிகள் மூன்று பேருக்கு குற்ற சம்பவங்களை ஈடுபட்டதற்காக இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது . பிரயாக்ராஜ் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் ஆதிக் அகமது சகோதரர் அஸ்ரப் முகம்மது இருவரையும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர் .அப்போது மர்ம கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இந்த படுகொலை சம்பவத்தால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதற்றம் நிலவு வருகிறது.
இதனால் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களும் , அரசியல் கட்சியினரும் அனுமதி இன்றி வெளியே வரக்கூடாது என்று போலீசார் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனர்.