Homeசெய்திகள்இந்தியாமியான், பாகிஸ்தானியர் என்று அழைப்பது மோசமானது: ஆனால் குற்றமல்ல- உச்ச நீதிமன்றம்

மியான், பாகிஸ்தானியர் என்று அழைப்பது மோசமானது: ஆனால் குற்றமல்ல- உச்ச நீதிமன்றம்

-

- Advertisement -

‘மியான்-தியான்’ மற்றும் ‘பாகிஸ்தானி’ என்று சொல்வது நிச்சயமாக மோசமானது, ஆனால் அதை ஒரு குற்றமாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 298-ன் (மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் ஏதாவது சொல்வது) கீழ் குற்றவாளியாகக் கருத உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை பரிசீலித்து வந்தது.

இந்த வழக்கில், சாஸ் துணைப்பிரிவு அலுவலகத்தின் உருது மொழிபெயர்ப்பாளரும், செயல் எழுத்தருமான (தகவல் உரிமை) எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் தொடர்பான தகவல்களை வழங்கச் சென்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் தனது மதத்தைக் காரணம் காட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார்தாரர் குற்றம் சாட்டினார்.

பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் இரண்டு வாரங்களுக்கு தடை!

இந்த வழக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதாவது, இது உயர் நீதிமன்றத்தின் பார்வையில் ஒரு குற்றம். இப்போது உச்ச நீதிமன்றம் ஒருவரை மியான்-தியான் , பாகிஸ்தானியர் என்று அழைப்பது நிச்சயமாக மோசமானது. ஆனால், சட்டத்தின் கீழ் அவரது மத உணர்வுகளைப் புண்படுத்துவது குற்றமாக இருக்காது.

உச்ச நீதிமன்றம், “சந்தேகத்திற்கு இடமின்றி, அந்தப்பேச்சு மோசமான அர்த்தத்தில் உள்ளது. இருப்பினும், இது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகாது” எனக் கூறி நீதிமன்றம் தற்போது மேல்முறையீட்டாளரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துள்ளது.இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 298-ன் கீழ் குற்றம் செய்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதை ஒரு குற்றமாகக் கருதவில்லை.

MUST READ