Homeசெய்திகள்இந்தியாதெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்

தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்

-

தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்

தெலங்கானா மாநில துணை முதல்வர் வீட்டில் குண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மிரட்டல் போன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா அதிகாரபூர்வ குடியிருப்பான பிரஜா பவனில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் பிரஜா பவன் வெடித்துவிடும் என்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் போன் வந்தது.

இதனால் உஷார்படுத்தப்பட்ட அதிகாரிகள் வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவியுடன் சோதனை நடத்தினர். இதனால் பிரஜா பவனில் அதிகாரிகள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி சோதனை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பிரஜா பவன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் சீதக்கா தற்போது பிரஜா பவனுக்குள் சோதனை நடைபெற்று வருகிறது. பிரஜா பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

MUST READ