Homeசெய்திகள்இந்தியாசெகந்திராபாத் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் தீ

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் தீ

-

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் தீ

செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஐதராபாத் விரைவு ரயிலின் சமையல் அறை, குளிர்சாதனம் ஆகியவை இரு பெட்டிகள் மட்டும் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த இரண்டு பெட்டிகளிலும் திடீரென தீ பற்றியதால் ரயில் நிலையம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இரயில் விபத்துகளைத் தடுக்க ஒன்றிய இரயில்வேத் துறை அமைச்சருக்கு கடிதம் – கலாநிதி வீராசாமி (apcnewstamil.com)

இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் தீ

இது குறித்து பேசிய செகந்திராபாத் தீயணைப்பு துறை அதிகாரி மோகன்தாஸ் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டிகளில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

MUST READ