
டெல்லியில் உள்ள துவாரகாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்து, பல்வேறு கலைஞர்கள், கைவினைஞர்களுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களையும் வழங்கினார்.
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கைவினைஞர்கள், கலைஞர்களின் நம்பிக்கைக் கதிராக விஸ்வகர்மாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விஸ்வகர்மாத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூபாய் 13,000 கோடி செலவிட உள்ளது.
விஸ்வகர்மா திட்டப் பயனாளிகளை அங்கீகரிப்பதும், ஆதரிப்பதும் காலத்தின் கட்டாயமாகும். விஸ்வகர்மாத் திட்டப் பயனாளிகளுக்கு நவீன கருவிகளை இயக்குதல், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் விஸ்வகர்மாத் திட்டப் பயனாளிகளுக்கு ரூபாய் 500 உதவித்தொகை வழங்கப்படும். உபகரணங்கள் வாங்குவதற்கும் விஸ்வகர்மாத் திட்டப் பயனாளிகளுக்கு ரூபாய் 1,500 வழங்கப்படும்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பொருட்களை பிரிண்டிங், பேக்கேஜிங், சந்தைப்படுத்தல் செய்வதற்கு மத்திய அரசு உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.