Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்EPS ஓய்வூதிய உயர்வு: மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?

EPS ஓய்வூதிய உயர்வு: மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?

-

- Advertisement -

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது, ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டம்.EPS ஓய்வூதிய உயர்வு: மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?பணியாளர்களுக்கு மாதந்தோறும், அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12% EPF நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோல 12% தொகையை நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பாக வழங்க வேண்டும். அதில் 8.33% EPS பென்ஷனுக்காகவும், 3.67% EPF-க்கும் பங்கிடப்படும். பணியாளர் 58 வயதில் ஓய்வுபெற்றது முதல், மாதா மாதம் EPS பென்ஷன் கிடைக்கப்பெறும். இத்தொகை தற்போது குறைந்தபட்சம் ரூ.1000 ஆகவுள்ளது.

இதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு, EPS-ன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், EPFO-வின் கீழ் உள்ள ஊழியர்களுக்கான சம்பள வரம்பை ரூ.18,000 இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தவும், கட்டாயப் பதிவுக்கான குறைந்தபட்ச ஊழியர்களின் எண்ணிக்கையை 20-இலிருந்து 10 ஆக குறைக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. இத்தகைய மாற்றங்கள், EPS பயனாளர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இனி வீடு, வாகனக் கடன் இஎம்ஐ குறையும்… ரிசர்வ் வங்கியின் அட்ராசக்கை அறிவிப்பு..!

MUST READ