Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இது போதும்.... இனிமே மூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க!

இது போதும்…. இனிமே மூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க!

-

40 வயது முடிந்து விட்டாலே இந்த மூட்டு வலி பிரச்சனை தொடங்கி விடுகிறது. அந்த காலத்தில் எல்லாம் 100 வயதானாலும் ஆண் – பெண் இருவரும் திடமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றோ 30 வயதிற்கு மேலாகிவிட்டாலே உடம்பில் என்ன பிரச்சனை ஏற்படுமோ? என்ற பயம்தான் அதிகரிக்கிறது. இது போதும்.... இனிமே மூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க!அதில் ஒன்றுதான் மூட்டு வலி. இந்த மூட்டு வலி பலருக்கும் தீரா பிரச்சனையாக இருந்து வருகிறது. எனவே இதனை விரைவில் குணப்படுத்தும் சில வழிகளை பார்க்கலாம்.

முதலில் கற்பூர எண்ணெய் என்பது வலியை குணப்படுத்தும் பயனுள்ள பொருளாகும். ஆகையினால் ஒரு ஸ்பூன் அளவு கற்பூர எண்ணெய், ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சூடாக்கி அதனை முழங்காலில் தேய்த்து மசாஜ் செய்து வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்.இது போதும்.... இனிமே மூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க!

அடுத்தது கற்றாழை என்பது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. முகத்திலிருந்து கால் வரை பயன்படும் ஒரு அருமருந்து. அந்த வகையில் கற்றாழை என்பது மூட்டு வலிக்கு தீர்வு தரும். கற்றாழை ஜெல் எடுத்து அதனை வலி இருக்கும் இடங்களில் தேய்த்து வர மூட்டு வலி குறையும். முழங்கால் வீக்கமும் குறையும்.

மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்பது அனைவரும் அறிந்ததே. எந்த காயமானாலும் மஞ்சளை முதலில் பயன்படுத்துவது நல்ல பலன் தரும். இது போதும்.... இனிமே மூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க!அதன்படி இந்த மஞ்சள் உள்வலியையும் போக்குகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். கடுகு எண்ணெயில் ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் கலந்து லேசாக சூடாக்கி அதனை மூட்டுகளில் வலி இருக்கும் பகுதிகளில் தேய்த்து வர வலிகள் குறைந்து விரைவில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இருப்பினும் உங்களுக்கு அடிக்கடி மூட்டு வலி தொந்தரவு ஏற்பட்டாலோ அல்லது நீண்ட நாட்களாக இந்த தொந்தரவு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ