Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உதிர்ந்த முடி எல்லாம் மீண்டும் அடர்த்தியாக வளர இந்த ஒரு எண்ணெய் போதும்!

உதிர்ந்த முடி எல்லாம் மீண்டும் அடர்த்தியாக வளர இந்த ஒரு எண்ணெய் போதும்!

-

ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். அதாவது உணவு பழக்க வழக்கங்களின் மாறுபாட்டாலும் சத்து குறைபாடுகளினாலும் இளம் வயதிலேயே முடி உதிர்ந்து வயதானவர் போல் தோற்றம் ஏற்படுகிறது.உதிர்ந்த முடி எல்லாம் மீண்டும் அடர்த்தியாக வளர இந்த ஒரு எண்ணெய் போதும்! வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் இரு பாலருமே இன்றுள்ள காலகட்டத்தில் எண்ணெய் தேய்த்து தலை வாருவதே கிடையாது. முகத்தில் எண்ணெய் வடியக் கூடாது என்பதற்காகவும் ஸ்டைல் என்ற பெயரிலும் பலரும் இன்று தலையில் எண்ணெய் வைக்க தவறுகிறார்கள். இதனால் விரைவில் நரைத்த முடி உண்டாவது மட்டுமல்லாமல் வழுக்கையும் விழுந்து விடுகிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறை வீட்டில் இருக்கும் நேரத்திலாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பது மிகவும் நல்லது. அதேசமயம் முடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்கள் செம்பருத்தி தேங்காய் எண்ணெயை தேய்த்தால் விரைவில் பலன் கிடைக்கும்.உதிர்ந்த முடி எல்லாம் மீண்டும் அடர்த்தியாக வளர இந்த ஒரு எண்ணெய் போதும்!

செம்பருத்தி எண்ணெய் செய்ய அரை லிட்டர் தேங்காய் எண்ணையை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் 20 முதல் 22 செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அடி கனமான ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதில் இந்த செம்பருத்திப் பூக்களை போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். அப்படி இல்லை என்றால் செம்பருத்தி பூக்களை அரைத்து அதன் விழுதையும் சேர்த்து சூடாக்கலாம்.உதிர்ந்த முடி எல்லாம் மீண்டும் அடர்த்தியாக வளர இந்த ஒரு எண்ணெய் போதும்! தேங்காய் எண்ணெயானது கலர் மாறி வரும் வரை காய்ச்ச வேண்டும். அதன் பின் குளிர வைத்து பாட்டிலில் அடைத்து தேவைப்படும் சமயத்தில் தலையில் தேய்த்துக் கொள்ளலாம். கட்டாயம் இதை வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் விரைவிலேயே வித்தியாசத்தை காணலாம். இருப்பினும் இதனால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ