மக்கள் நீதி மய்யம் கட்சியில் ராஜ்யசபா எம்.பியை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகக்குழு கூட்டத்தை விரைவில் நடத்துகிறார் கமல்ஹாசன்!2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றது. மக்களவைத் தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை, இருப்பினும் 2026ம் ஆண்டு மாநிலங்களை சீட் வழங்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிகிறது. இதனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவைக்கு செல்வது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் கமல்ஹாசனை ராஜ்யசபா உறுப்பினராக வற்புறுத்தி வரும் நிலையில் இது தொடர்பாக கமல்ஹாசன் தலைமையில் விரைவில் நிர்வாகக்குழு கூட்டம் கூட்டி முடிவு எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே-2 கட்சியின் போதுக்குழு கூட்டம்:தவறாமல் கலந்து கொள்ளும்படி எடப்பாடி அறிவுறுத்தல்