Homeசெய்திகள்அரசியல்பிடிஆரின் துறையை மாற்றியது துரோகம்- அண்ணாமலை

பிடிஆரின் துறையை மாற்றியது துரோகம்- அண்ணாமலை

-

பிடிஆரின் துறையை மாற்றியது துரோகம்- அண்ணாமலை

பழனிவேல் தியாகராஜன் துறையை மாற்றியது மதுரைக்கு செய்கிற மாபெரும் துரோகம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

மதுரையில் செய்தியாளார்களிடம் பேசிய அண்ணாமலை, பழனிவேல் தியாகராஜன் துறையை மாற்றியது மதுரைக்கு செய்கிற மாபெரும் துரோகம். தவறு ஏதும் செய்யாமல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்பட்டுள்ளது. அவர் தனது கருத்தை சொல்லியிருக்கிறார். திராவிட மாடல் அரசில் யாருக்கு வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை துறை மாற்றம் எடுத்துரைக்கிறது. சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்குவது சரியா? மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் – மாநில அரசு விரைந்து குறைகளை சரிசெய்ய வேண்டும்.

"குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு....."- அண்ணாமலை ட்வீட்!
Photo: Annamalai

மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா? விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கைது செய்தால் தான் அடுத்துக்கட்ட பேச்சுவார்த்தையை தொடர்வோம் என கூறுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கவிஞர் வைரமுத்து மீது பாடகி ஒருவர் கூறிய பாலியல் புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சிஎஸ்கே அணியின் வெற்றிக்கோப்பை பெருமாள் கோயிலில் வைத்து பூஜை போடப்பட்டது. ஆண்டவன் அருளால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லது நடக்கும்” என்றார்.

MUST READ