Homeசெய்திகள்அரசியல்பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்

பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்

-

பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்

பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

Image

இதுதொடர்பாக மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியில் சில காலமாக அசாதாரணமான சூழ்நிலை நிலவிவந்த நிலையில், ஒரு சில தினங்களாக பலர் என்னை தொடர்புகொண்டு சில விளக்கங்களை கேட்க ஒரு அமயத்தில் அழைக்க முற்படும்போது சிலருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகிறது. ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக பாஜகவில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள்தான், பதவிதான் எதிர்பார்த்து பணிபுரிபவன் அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அனைவருக்கும் தெரியும். என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை காலம் எனக்கு எதிரான எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களையும் எவ்வாறு நான் எதிர்கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனகே வியப்பாக இருக்கிறது. தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநிலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை.

துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரம் ஆகவே இதை செய்கிறேன். நிச்சயமாக திமுகவில் இணையமாட்டேன். திமுகவை விமர்சிக்கவே பாஜகவில் இருந்து விலகிறேன். தொடர்ந்து என் மீது அன்பு காட்டி வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். என்னுடைய கட்சியில் இணைந்து பணி செய்து வரும் அன்பு சகோதரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர்களது வலியுறுத்தலின்பேரிலும் அன்புக்குரிய தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் அவர்களுடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ