கோவை மாவட்டம், சூலூரில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “எடப்பாடி பழனிசாமியின் கோரப்பிடியில் உள்ள அ.தி.மு.க.வைக் காப்பாற்றுவதே என் எண்ணம். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை கேட்டுக் கொண்டதால் வாபஸ் பெற்றோம். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது, ஆதரவு தந்ததால் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காப்பாற்றப்பட்டது.
“தி.மு.க.வின் சமூகநீதி வேஷம் கலைந்துவிட்டது”- அண்ணாமலை ட்வீட்!
அதிகாரப் போதை, பணத் திமிரால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அதிக இடர்பாடுகளைக் கொடுத்தனர். தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர்; அந்த பக்கம் உள்ளவர்கள் குண்டர்கள் தான் உள்ளனர். தனிக்கட்சித் தொடங்குவது என் நோக்கமே இல்லை. நான் சில விஷயங்களைக் கூறினால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு சென்று விடுவார்” என்று கூறினார்.