புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிக்க முதலமைச்சரைச் சந்திக்க வர வேண்டாம் என தி.மு.க. தலைமைக் கழகம் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை, அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கட்டாயம் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.