Homeசெய்திகள்அரசியல்திமுகவின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிக்காதீர் - அண்ணாமலை

திமுகவின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிக்காதீர் – அண்ணாமலை

-

திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிக்காதீர் -  அண்ணாமலை

‛‛திமுகவின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம்” என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்பதற்காகவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும். அதற்கான வழிமுறைகளை வகுக்க தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையிலான, ஒரு நபர் குழு முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை வழங்கியுள்ளது.

சந்துருவின் அறிக்கைக்கு எதிராக பாஜக செயற்குழு கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தோம். இதனால் சந்துரு வருத்தப்பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. சமீபத்தில் ஒரு விழாவில், இந்த அறிக்கை குறித்துப் பேசுகையில்,
நூலகம், அறநெறி குறித்தெல்லாம் பேசி, இவற்றைப் பற்றி பா.ஜ.க-வுக்கு என்ன தெரியும் என்று கூறியிருக்கிறார்.

எரிந்து போன யாழ்ப்பாணம் நூலகத்தில் இந்தியப் புத்தகங்களுக்கான பிரத்யேகப் பகுதியை திறந்து வைத்து, அதற்கு 16,000 புத்தகங்களை வழங்கிட ஏற்பாடுகள் செய்தது , பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான். அதே யாழ்ப்பாணத்தில், சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், கலாச்சார மையம் அமைத்தது, மோடி அரசுதான். நூலகம், அறநெறி, கலாச்சாரம் குறித்தெல்லாம் சந்துரு எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம்.

அறிக்கை அளித்ததோடு உங்கள் பணி நிறைவடைந்தது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஜனநாயகத்தில், அரசின் பொதுமக்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பது எதிர்க்கட்சிகளின் பணி.

திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், சந்துரு, அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம்.

தீபாவளிக்கு களமிறங்கும் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’!

சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு. மக்களின் வரிப்பணத்தில், திமுகவின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

MUST READ