அண்ணாமலை செய்வது ‘அரசியல் ஸ்டண்ட்’- துரைமுருகன்
அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.
வேலூரில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “காவிரி குண்டாற்றை இணைத்துள்ளோம். காவிரி தெற்கு- வெள்ளாறு வகையின் வழியாக குண்டாற்றை இணைக்கிறோம். கிணற்றை வெட்டுகிறோம், ஆயிரம் கோடியில் இதனை செய்துள்ளோம். காவிரி குண்டாறும் விரைவில் வரும் நிச்சயமாக
பாஜக தலைவர் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் ஒரு பொருட்டே இல்லை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலை நான் பார்க்கவில்லை. அது எனக்கு தெரியாது. இதெல்லாம் அரசியல் ஸ்டண்ட்! அவ்வளவுதான்” எனக் கூறினார்.