மதுரை சிம்மக்கல்லில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்
வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நாளை வரும் நிலையில் அதன் முடிவுகளை கருத்து கணிப்பு எனும் பெயரில் முன்கூட்டியே கூறுவது ஏற்புடையதல்ல
ஐந்து அல்லது ஆறு கருத்துக்கணிப்பு எடுக்கும் நிறுவனங்களை வைத்து கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டது
இந்திய வரலாற்றில் நடக்காத வகையில் மூன்று மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
https://www.apcnewstamil.com/news/article-news/this-is-the-life-of-karunanidhi/89562
கருத்துக் கணிப்புகள் எடுத்த நிறுவனங்கள் அச்சடித்தது போல ஒரே மாதிரியாக தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளன
இந்த கருத்து கணிப்புகளை அறிவு சார்ந்த மக்கள் நம்ப முடியாத வகையிலும், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் உண்மையும், ஞானமும் இல்லை
பாஜக ஒரு மாநிலத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது, ஆனால் 15 தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் எட்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது, ஆனால் 13 தொகுதிகளில் வெற்றி பெருமென்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, நாளை வெளிவரும் தேர்தல் முடிவுகளுக்கும் கருத்துக்கணிப்புக்கும் சம்பந்தமில்லாத வகையில் முடிவுகள் வெளிவரும்
நாளை வெளிவரக்கூடிய தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பார்ப்போம் இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியகராஜன் தெரிவித்துள்ளார்.