Homeசெய்திகள்அரசியல்இந்தியா முழுவதும் பரவிய மொழிப்புரட்சி: அடித்தளம் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

இந்தியா முழுவதும் பரவிய மொழிப்புரட்சி: அடித்தளம் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

-

- Advertisement -

”தமிழ்­நாட்­டில் எப்­போ­தும் கனன்று கொண்டு இருக்­கும் மொழிப்­பு­ரட்­சி­யா­னது இப்­போது  இந்­தியா முழு­மைக்­கும் தொடங்­கி­விட்­டது. இத்­த­கைய மொழிப்­பு­ரட்­சிக்­கும் தமிழ்­நா­டு­தான் அடித்­த­ளம் அமைத்து இருக்­கி­றது” என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பரவிய மொழிப்புரட்சி என்கிற தலைப்பில் முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், ”ஒருங்­கி­ணைந்த பள்­ளிக் கல்­வித் திட்­டத்­துக்­கான இரண்­டா­யி­ரம் கோடி நிதி­யைத் தர வேண்­டு­மா­னால், மும்­மொ­ழித் திட்­டத்தை ஏற்­றுக் கொள்ள வேண்­டும் என்று ஒன்­றிய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான், அதமமான நிபந்­த­னையை வைத்­தார். ‘இந்தி மொழி ஆதிக்­கத்தை ஏற்­றுக் கொண்­டால் தமிழ் நாடு பல நூற்­றாண்­டு­கள் பின் தங்­கிப் போகும். பத்­தா­யி­ரம் கோடி கொடுத்­தா­லும் அதனை ஏற்க மாட்­டோம்’ என்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் முழங்­கி­னார்­கள். இது இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லங்­க­ளில் எதி­ரொ­லித்­தது.

சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. பள்­ளி­க­ளில் தெலுங்கு மொழி கட்­டா­யம் என தெலங்கானா மாநில அரசு அறி­வித்­தது. இவை அனைத்­தும் ஒன்­றிய அர­சின் கட்டுப்பாட்­டில் உள்ள கல்வி நிறு­வ­னங்­கள் ஆகும். ஒன்­றாம் வகுப்பு முதல் பத்­தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்­டா­ய­மாக கற்­பிக்­கப்­பட வேண்­டும் என்­றும் அம்­மா­நில அரசு அறிவித்­தது.

பஞ்­சா­பில் உள்ள சி.பி.எஸ்.சி. உள்­ளிட்ட அனைத்­துப் பள்­ளி­க­ளி­லும் பஞ்­சாபி மொழி கட்­டா­யம் என்று அம்­மா­நி­லத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அறி­வித்­தது.

இப்­படி ஒவ்­வொரு மாநி­ல­மாக அறி­வித்த நிலை­யில், ‘இந்­தித் திணிப்பை என்­றும் எதிர்ப்­போம்’ என்ற தலைப்­பில் தொடர் கடி­தம் எழு­தத் தொடங்­கி­னார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள். அதில் மிக முக்­கி­ய­மான ஒரு செய்­தி­யைக் குறிப்­பிட்டு இருந்தார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

‘இந்தி மொழியை ஏற்­றுக்­கொண்ட பீகார் மாநில மக்­க­ளின் சொந்த மொழி­யான மைத்­திலி, அந்த மாநி­லத்­தின் அடுத்­த­டுத்த தலை­மு­றை­யி­னர் அறிய முடி­யா­த­படி வழக்­கொ­ழிந்­தது’என்­றும்,‘இந்­தி­யா­வின் பெரிய மாநி­லம் உத்­த­ர­பி­ர­தே­சம். இந்­தி­தான் அந்த மாநி­லத்­தின் தாய்­மொழி எனப் பல­ரும் நினைப்­போம். உண்மை அது­வல்ல. பல்­வேறு தாய்­மொ­ழி­களை, மண்­ணின் மைந்­தர்­க­ளு­டைய மொழி­கள் அனைத்­தை­யும் இந்தி என்­கிற ஆதிக்க மொழி­யின் படை­யெ­டுப்பு சிதைத்­து­விட்­டது’என்­றும், ‘ உத்தரப்பிரதே­சம், பீகார், மத்­திய பிர­தே­சம், ஜார்­கண்ட், சட்­டீஸ்­கர், ஹரி­யானா, ராஜஸ்­தான் என இந்­தியை ஆட்­சி­மொ­ழி­யா­கக் கொண்ட மாநி­லங்­க­ளின் பூர்­வீக மொழி­கள் சிதைக்­கப்­பட்டு, அழிக்­கப்­பட்ட நிலை­யில், அந்த மொழி பேசும் மக்­க­ளின் பண்­பாட்டு விழு­மி­யங்­க­ளும், இலக்­கி­யச் செழு­மை­க­ளும், மர­பார்ந்த அறி­வுத்­தி­ற­னும் இருந்த இடம் தெரி­யா­மல் மறைந்து போயி­ருக்­கின்­றன’என்­றும், ‘வட­இந்­திய மாநிலங்க­ளில் 25க்கும் மேற்­பட்ட அந்­தந்த மண்­ணின் தாய்­மொ­ழி­களை கடந்த ஒரு நூற்­றாண்டு காலத்­தில் இந்தி – சமஸ்­கி­ரு­தம் எனும் ஆதிக்க மொழி­க­ளின் படையெடுப்பு சிதைத்­தி­ருக்­கி­றது’என்­றும் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் அந்­தக் கடி­தங்­க­ளில் ஆதா­ரப்­பூர்­வ­மாக எழு­தி­னார்­கள். இந்த செய்­தி­கள் சமூக ஊட­கங்­கள் மூல­மாக வட மாநி­லங்­க­ளில் பர­வத் தொடங்­கி­ய­தும், அங்­குள்ள மக்­கள் இதனை ஒப்புக் கொண்டு மறு­மொ­ழி­களை இட்­டி­ருந்­தார்­கள்.

“நான் மைத்­திலி மொழி­யைச் சேர்ந்­த­வள். ஆனால் என் பிள்­ளை­க­ளுக்கு அதனை கற்பிக்க என்­னால் முடி­ய­வில்லை”என்று பீகா­ரைச் சேர்ந்த ஒரு பெண் பதிவு போட்டிருந்­தார்.‘என்­னு­டைய மொழி மகாதி. ஆனால் இன்று அம்­மொழி வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ருக்கு புரி­யாத மொழி­யா­கி­யுள்­ளது. அதற்­குக் கார­ணம் இந்தி மொழித் திணிப்­பு­தான். தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் சொல்­வதை நான் வழிமொழிகிறேன்’என்று அவின் என்ற இளை­ஞர் பதிவு செய்­துள்­ளார். தக­வல் தொழில்­நுட்­பத் துறை அமைச்­சர் பி.டி.ஆர்.பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் ஆங்­கி­லத்­தில் அளித்த பேட்­டிக்கு பின்­னூட்­டம் இட்ட வட­மா­நி­லத்­த­வர் பல­ரும் இதே போன்ற எதிர்வினை­யைச் செய்­துள்­ளார்­கள்.

இந்தியை கொண்டுவர முயற்சி.. இருமொழி கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதுதான் திராவிட மாடலா? - சீமான் கண்டனம்..

ஆந்­திர முத­ல­மைச்­சர் சந்­தி­ர­பாபு அவர்­கள் அளித்த பேட்­டி­யில், “உல­கம் முழுக்க தமிர்­கள் நல்ல பத­வி­க­ளில் இருக்­கி­றார்­கள். ஆங்­கி­லம் படித்­த­தால் தான் அவர்­கள் உல­கம் முழுக்க கோலோச்­சு­கி­றார்­கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பத­வி­க­ளில் நாடு முழுவதும் தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள் இருக்­கக் கார­ணம் அவர்­க­ளது ஆங்­கில அறிவு தான். ஆங்­கி­லத்தை முறை­யா­கக் கற்­ற­தால் தான் அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடுக­ளில் உள்ள உயர் நிறு­வ­னங்­க­ளில் தமி­ழர்­கள் இருக்­கி­றார்­கள். எந்த நாட்­டுக்­குச் சென்­றா­லும் அங்கு முக்­கி­யப் பத­வி­க­ளில் தமி­ழர்­க­ளைப் பார்க்­க­லாம்”என்று சொல்லி இரு­மொ­ழிக் கொள்­கை­யின் வெற்­றி­யைச் சொல்லி இருந்­தார்.

இரு­மொழி கொள்­கைக்கு கன்­னட வளர்ச்சி ஆணை­யம் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது. கர்நா­ட­கா­வில் இரு­மொ­ழிக் கொள்­கையை செயல்­ப­டுத்த வேண்­டும் என அம்­மா­நில முத­ல­மைச்­சர் சித்­த­ரா­மை­யா­வுக்கு கன்­னட வளர்ச்சி ஆணைய தலை­வர் கடி­தம் எழுதி உள்­ளார். ‘கன்­னட மொழியை பாது­காக்க வேண்­டு­மா­னால் இரு­மொழி கொள்கையை பின்­பற்ற வேண்­டும்’ என்று கன்­னட வளர்ச்சி ஆணை­யத் தலை­வர் புரு­ஷோத்­தம் பிளி­மலே தெரி­வித்­துள்­ளார்.

இது ஏதோ எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லத்­தில் மட்­டு­மல்ல, பா.ஜ.க. ஆளும் மகாராஷ்­டி­ரா­வி­லும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. ‘மகா­ராஷ்­டிரா வரு­ப­வர்­கள் மராத்தி கற்­றுக் கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை’ என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்­பின் மூத்த தலை­வர் சுரேஷ் பையாஜி ஜோஷி சொன்­ன­தும், அத­னைக் கடு­மை­யாக எதிர்த்­த­வர் அம்­மா­நி­லத்தை ஆளும் பா.ஜ.க. முத­ல­மைச்­சர் பட்­னா­விஸ்.‘மும்பை மற்றும் மராட்­டி­யத்­தின் மொழி மராத்தி. அனை­வ­ரும் மராத்தி கற்க வேண்­டும். மராத்தி மொழி­யைப் பேச வேண்­டும்’என்று சொல்லி இருக்­கி­றார் பா.ஜ.க. முத­லமைச்­சர் பட்­னா­விஸ்.

சிவ­சேனா தலை­வர் உத்­தவ் தாக்­கரே சொல்லி இருக்­கி­றார்: “ஆர்.எஸ்.எஸ். தலை­வர் மீது தேசத் துரோக வழக்­குப் பதிவு செய்ய வேண்­டும். இவ­ரது கருத்­து­கள் மும்பையைப் பிரிக்­கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் திரை­ம­றைவு காட்­சி­க­ளைப்    பிர­­லிக்­கி­றது. அவர் மகா­ராஷ்­டி­ரா­வில் இப்­படி பேசி இருக்­கி­றார். குஜ­ராத், தமிழ்­நாடு, கர்­நா­டகா, கேரளா, மேற்கு வங்­கம் ஆகிய மாநி­லங்­க­ளில் இப்­ப­டிப் பேசி­விட்டு    பாது­காப்­பாக அவ­ரால் திரும்பி வர முடி­யுமா?’’ என்று கேட்­டி­ருக்­கி­றார்.

ஆம்! உண்­மை­தான்! பா.ஜ.க. செய்­யும் மொழித் திணிப்பு என்­பது இந்­தி­யா­வின்   பன்­மு­கத் தன்­மை­யைச் சிதைக்­கும் பிள­வு­வாத அர­சி­யல்­தான். அதனை இப்­போது இந்­தி­யாவே உணர்ந்து கொண்டு விட்­ட­தன் அடை­யா­ளம்­தான் பல்­வேறு               மாநி­லங்­க­ளில் எதி­ரொ­லிக்­கும் மொழி ஆத­ரவு மொழி­கள்” எனக் கூறப்பட்டுள்ளது.

MUST READ