Homeசெய்திகள்அரசியல்மயிலாடுதுறை இளைஞர்கள் படுகொலை: கடும் நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மயிலாடுதுறை இளைஞர்கள் படுகொலை: கடும் நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

-

- Advertisement -

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் என்னும் கிராமத்தில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் படுதொலை செய்யப்படது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  தனது வலைதள பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.  மயிலாடுதுறை இளைஞர்கள் படுகொலை: கடும் நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்மேலும் இது குறித்து தனது பதிவில் – எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் பாதுகாபற்ற மாடல் அரசை நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின்  தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை. ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?

இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, நடந்த இந்த கொலை , வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகையில் செய்தியாக வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா? இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில்  சிறிதாவது செலுத்துமாறு  ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளாா்.

சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட 2  மாணவர்கள் கொலை… தூண்டிக் கொண்டிருக்கிறீர்களா முதல்வரே?- அண்ணாமலை ஆவேசம்

MUST READ