Homeசெய்திகள்அரசியல்அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி-வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி-வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

-

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதை செய்து கொடுப்போம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி…

அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி-வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

 

வருங்காலத்தில் இதுபோன்ற வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்… அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி…அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியதாக தகவல்.

அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி-வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

சென்னை அம்பத்தூரில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் ஆகிய பகுதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார்.அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தேங்கியுள்ள மழைநீரை வேகமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொழிற்சாலைகளில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் மழை நீரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.அம்பத்தூர் உற்பத்தியாளர் சங்கத்தினருடன் மேற்கொண்ட ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி-வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

அப்போது அவர் வருங்காலத்தில் இது போன்ற பாதிப்புகள் நிகழாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் தொழிற்பேட்டையில் நுழைந்த வெள்ளத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இயந்திரங்கள் பழுதாகியதாகவும், உற்பத்தி பாதிக்கப்பட்ட தாகவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்த தாகவும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அவர்களுக்கு 2000 கோடி ரூபாய் இழப்பு என்றும் அவர்கள் தெரிவித்தனர். அரசாங்கத்தால் என்னென்ன உதவிகள் அவர்களுக்கு செய்து கொடுக்க முடியுமோ அதை செய்து கொடுப்போம் என்று அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மழைநீரை வெளியேற்ற முடிந்தவரை வேகப்படுத்தி இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

MUST READ