Homeசெய்திகள்அரசியல்பிரபாகரன் மரணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 16 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான கடிதம்..!

பிரபாகரன் மரணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 16 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான கடிதம்..!

-

- Advertisement -

விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், 16 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபாகரன் மரணம் குறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

அதில், ”உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே.,எமது விடுதனை இயக்கத்தின் தலைவரும் தமிழினத்தின் ஒப்பற்ற பெருந்தலைவருமான பிரபாகரன், இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதி தளராது 36 ஆண்டுகளாக எதிரிப் படைகளோடு அடிபணியாது போராடி நந்திக் கடலோரம் நடைபெற்ற இறுதிச் சமரில் வீரகாவியமானார்.

இலங்கை விடுதலை புலிகள் பிரபாகரன்

இலங்கை அரசுக்கும் அதன் ராணுவ இயந்திரத்துக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய உலகநாடுகளின் கூட்டுப்படை வலிமையையும் ஏகாதிபத்திய அரசுகளின் சூழ்ச்சித் திட்டங்களையும் எதிர்கொண்டு அனைத்து தடைகளையும் தனது பேராற்றலால் உடைத்தெறிந்து தமிழினத்தின் ஆற்றலோனாக பிரபாகரன் திகழ்கின்றார்.

தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய லட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோ இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடி பிரபாகரன், 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள், வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை தமிழீழ மாவீரர் பணிமனை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன், வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயரமிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும் ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

காலம் காலமாக அடிமை வாழ்வுக்குள் சிக்குண்டு, சிதைந்து கொண்டிருந்த ஈழத் தமிழினத்துக்கு கிடைத்த ஒரு சூரியத் தேவனாக, இந்த நூற்றாண்டில் உலகமே வியக்கும் பல அற்புதமான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து தமிழினத்தின் அதி உச்சவீர அடையாளமாக பிரபாகரன் திகழ்கிறார் என்றும் தமிழினத்தின் கலங்கரை விளக்காக, தமிழ் மக்களை அடிமைத் தனத்தில் இருந்து கரைசேர்க்கப் புறப்பட்டு, அடிமை விலங்குகள் உடைத்து கொண்ட கொள்கையில் இறுதி வரை உறுதி தளராது போராடிய பிரபாகரன், மாவீரர் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழினத்தின் விடிவுக்காக, தமது உயிரை அர்ப்பணித்த எமது தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரெழுச்சியோடு நெஞ்சங்களில் இருத்தி, தமிழீழப் போராட்ட வரலாற்றின் மிகப் பெரும் அடையாளமாக எமது இதயக் கோவில்களில் வைத்து பூசிக்கப்படக் கூடியவராக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களது மிகப் பெரும் கடமையும் பொறுப்புமாகும்.

ஆகவே, வரலாற்றில் எமக்குக் கிடைத்த பொக்கிசமான, பிரபாகரனுக்கு அவரது வழியில் களமாடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம் பெயர் தாயக மற்றும் தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பு எங்கும், நடத்துகிற அதேவேளையில் அனைவரும் ஒன்றிணையக் கூடிய ஐரோப்பிய நாடு ஒன்றில் 2025-ம் ஆண்டு நடுப்பகுதியில், உலகம் போற்றும் பேரெழுச்சியாக முன்னெடுக்க இருக்கிறோம்’ எனக்கூறப்பட்டுள்ளது.

MUST READ