ஜல்கானில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சேவின் மகள் மற்றும் அவரது தோவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரே காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் எனது மகளையும் அவரது தோழிகளையும் துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல், காவலரிடம் தவறாக நடந்து கொண்டு அவரைத் தாக்கியதாகவும் ரக்ஷா காட்சே கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முக்தாய் நகர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ஒன்று அமைச்சர் காட்சேவின் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பானது. மற்றொன்று ஒரு போலீஸ்காரரைத் தாக்கியது தொடர்பானது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் கிரண் மாலி மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் மொத்தம் 7 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரர்த்தில், ”நான் ஒரு மத்திய அமைச்சராக அல்ல, ஒரு தாயாக காவல் நிலையத்திற்குச் சென்றேன். நேற்று முன்தினம் இரவு என் மகள் மற்றும் அவளுடைய தோழிகளுடன் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதனால் அவதிப்படும் தாய்மார்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க வேண்டும். என் மகளும் அவளுடைய தோழிகளும் மகாசிவராத்திரி விழாவிற்குச் சென்றிருந்தனர். அங்கு சிலர் அவர்களைத் துன்புறுத்தினர்.
அவர்கள் போலீஸ் காவலரிடமும் தவறாக நடந்து கொண்டார். போலீசார் முன்னிலையில் கூட, அவர்கள் தவறாக நடந்து கொள்ளவும், வீடியோக்களை எடுக்கவும் துணிந்தனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் நான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளேன். 30-40 பேர் கூடி போலீசாரிடம் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினர். அவர்கள் எந்த வீட்டிற்குள்ளும் நுழைந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” அமைச்சர் காட்சே கூறினார்.
காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனிகேத் போய், எம்எல்ஏ சந்திரகாந்த் பாட்டீலின் தீவிர ஆதரவாளர். ராவர் மக்களவைத் தொகுதியின் சிவசேனா ஷிண்டே பிரிவின் மாவட்டத் தலைவரான சோட்டுபாயின் மருமகன். முக்தாய் நகர் காவல் நிலையத்தில் அனிகேத் போய் மீது ஏற்கனவே நான்கு முதல் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனிகேத் போய், பியூஷ் மோர், சோஹம் கோலி, அனுஜ் பாட்டீல், கிரண் மாலி, சேதன் போய், சச்சின் பால்வே ஆகியோர் அடங்குவர்.
பியூஷ் மோர், ஷிண்டே பிரிவின் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர். சச்சின் பால்வே, முக்தாய் நகர் நகர சிவசேனா ஷிண்டே பிரிவு மருத்துவ உதவிப் பிரிவின் தலைவராக உள்ளார். கிரண் மாலி மற்றும் சோஹம் கோலி ஆகியோர் சிவசேனா ஷிண்டே பிரிவு அதிகாரிகளின் உறவினர்கள்.
ரக்ஷா காட்சேவின் மகள் மற்றும் அவரது தோழிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்த சம்பவத்தில் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார். இதைச் செய்தவர் யாராக இருந்தாலும், இது ஒரு இழிவான செயல். போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிலர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் இதுபோன்ற துன்புறுத்தல்கள் தவறு. அவர்களை மன்னிக்க முடியாது, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.