- Advertisement -
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாததால் தோல்வியை சந்தித்ததாக திருமா கருத்து தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவனுடன் செய்தியாளர் குணா நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்.
அதிமுக பலவீனமடைந்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளும் வலுவாக இருக்கும் வரை பாஜகவால் காலூன்ற முடியாது, அதனை அதிமுக உணர வேண்டும்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பாஜக, நாம் தமிழர் கட்சிக்கு மறைமுக ஆதரவு வழங்கியது வெளிப்பட்டுள்ளது. அதிமுக வாக்குகளும் திமுகவிற்கு கிடைத்துள்ளது
சாதி வாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை சாதி வாரி கணக்கெடுப்பு மூலம் திட்டங்கள் தீட்டவும், தரவுகளுக்காகவும் நடத்தப்பட வேண்டும் என திருமா முதல்வருக்கு கோரிக்கை.