Homeசெய்திகள்ரம்யா பாண்டியன், ஷிவதா கூட்டணியில் புதிய திரில்லர்!

ரம்யா பாண்டியன், ஷிவதா கூட்டணியில் புதிய திரில்லர்!

-

ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ரம்யா பாண்டியன், ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு தற்போது ‘இடும்பன்காரி‘ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ரம்யா பாண்டியனு டன் இணைந்து மலையாள நடிகை ஷிவதா நாயர் நடித்துள்ளார்.
இருவரும் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, மனோபாலா, நீயா நானா கோபிநாத், இயக்குனர் வேலு பிரபாகரன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை திருக்குமரன் என்டர்டைன்மண்ட் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருள் அஜித் இயக்கியிருக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
துப்பறியும் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

MUST READ