Homeசெய்திகள்விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

-

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 21 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 22வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. லக்னோ அணி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டு வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறவுள்ள 22வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் லைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் இரண்டு வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் மூன்றையும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 28 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் 18 போட்டிகளில் சென்னை அணியும் 10 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வெற்றியை பெற்றுள்ளன..

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட்டும் சுனில் நரேனும் களமிறங்கவுள்ளனர்.

MUST READ