Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி ஆட்டம் - இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு

டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி ஆட்டம் – இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு

-

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்ரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு நடைபெறவுள்ள 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு கயானா மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர் முழுவதும் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போட்டியானது தொடர் மழைக் காரணமாக ஆட்டமானது ஒரு மணி நேரமாக டாஸ் போடாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நடைபெற்ற நாணய சுண்டலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

 

MUST READ