Homeசெய்திகள்விளையாட்டுமனைவியை பிரிவதாக ஹர்திக் பாண்டியா அதிகாரபூர்வ அறிவிப்பு

மனைவியை பிரிவதாக ஹர்திக் பாண்டியா அதிகாரபூர்வ அறிவிப்பு

-

மனைவியை பிரிவதாக ஹர்திக் பாண்டியா அதிகாரபூர்வ அறிவிப்பு

நடன கலைஞரான நடாஷா – இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தம்பதிகளின் திருமணம் 2020-ம் ஆண்டு மே 31-ம் தேதி நடைபெற்றது. நடாஷா பிக் பாஸ் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் நெட்டிசன்கள் இந்த தம்பதியர்க்கு விவாகரத்து நடைபெற்றுள்ளதாக கூறினர், தற்போது இருவரும் அதிகாரபூர்வமாக  அவர்களது முடிவை அறிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா – நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதியினர் இந்த விவாகரத்து முடிவு  “கடினமான முடிவு” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனைவியை பிரிவதாக ஹர்திக் பாண்டியா அதிகாரபூர்வ அறிவிப்பு

இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம், தற்போது நானும், நடாஷாவும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இது தான் நல்லது என்று நம்புகிறோம். பரஸ்பர மரியாதை, தோழமையுடன் மகிழ்ச்சியை அனுபவித்த நாங்கள் எடுத்த கடினமான முடிவு இது.

ஃபயர் சாங்…. சூர்யாவின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் ‘கங்குவா’ முதல் பாடல்!

மகன் அகஸ்தியா, எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார் எனவும் அவருக்கான மகிழ்ச்சிக்காக பெற்றோர்களான நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் அவருக்கு வழங்குவதை உறுதி செய்வோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆதரவையும் கேட்டுக்கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

MUST READ