Homeசெய்திகள்விளையாட்டு45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி

45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி

-

 45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றிஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி.

ஆடவர் பிரிவில் மெரோகோவை எதிர்கொண்ட இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஆடவர் பிரிவில் பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகேசி, விதித் குஜராத்தி ஆகிய நால்வருமே தலா 1 புள்ளிகள் பெற்று மொராகோவை வென்றனர்.

அதே சமயம் மகளிர் பிரிவில் ஜமைக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 3.5 – 0.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

மகளிர் அணியில் வைஷாலி, திவ்யா தேஷ்முக், தானியா சச்தேவ் ஆகியோர் தலா ஒரு புள்ளியும், வந்திகா அகர்வால் டிரா போட்டியை செய்து 0.5 புள்ளிகளும் பெற்று  ஜமைக்காவை 3.5-0.5 என வெற்றி பெற்றனர்.

ஆதார் அட்டையை எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம் – ஆதார் ஆணையம்

எனவே முதல் சுற்றின் முடிவில் இந்திய ஆடவர் அணி மொராக்கோவையும், மகளிர் அணி ஜமைக்காவையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக நடைபெறும் 11 சுற்றுகள் முடிவில், புள்ளிகளின் அடிப்படையிலும், டை பிரேக்கர் முறையிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்கள் உறுதி செய்யப்படும்.

MUST READ