Homeசெய்திகள்விளையாட்டுஇரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வெல்லுமா இந்திய அணி - தென் ஆப்பிரிக்கா அணியுடன்...

இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வெல்லுமா இந்திய அணி – தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று பலப்பரீட்சை!

-

இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாVSதென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானும், குருப் 2 பிரிவில் தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் அரையிறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை கோப்பையை வெல்லாத தென்னாப்பிரிக்கா அணி இப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும். அதே நேரம் இந்திய அணியும் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மத்தியில் ஆரவாரமாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தாட்டனமானது மேற்கிந்திய தீவுகளில் உள்ள கென்னிங்க்ஸ்டன் ஓவல் பார்படாஸ் மைதானத்தில் இன்று இரவு 8 தொடங்குகிறது.

 

MUST READ