Homeசெய்திகள்விளையாட்டுவிராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து ஜடேஜாவும் ஓய்வை அறிவித்தார்!

விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து ஜடேஜாவும் ஓய்வை அறிவித்தார்!

-

விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து ஆல் ரவுண்டர் ரவீங்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 76 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய அக்‌ஷர் பட்டேல் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது. பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து ஆல் ரவுண்டர் ரவீங்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டி நிறைவடைந்ததும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், தற்போது ஜடேஜாவும் ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நன்றி நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலகக் கோப்பையை வெல்வது ஒரு கனவு. அது நனவாகிவிட்டது. இது எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம் என ஜடேஜா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ