குவைத் வீரரின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று லிச்சென்ஸ்டீன் அணிகளுக்கு எதிரான போட்டியில் களம் இறங்கினார்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் யூரோ கோப்பைக்காண தகுதி சுற்ற போட்டியில் பங்கேற்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொனால்டோ 4 – 0 என்ற புள்ளி கணக்கில் போர்ச்சுக்கல் வெற்றிபெற வழி வகுத்தார்.
இது கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய 197 ஆவது போட்டி.
போர்ச்சுக்கல் அணியில் 2003 ஆம் ஆண்டு தன்னுடைய பயணத்தை தொடங்கி இவர் தற்போது 38 வயதிலும் இளம் வீரர்களுக்கு சவாலாக களமாடி வருகிறார்.
குவைத் வீரர் படர் அல் – முதாவா 196 போட்டிகளில் தன்னுடைய நாட்டிற்காக விளையாடியது சாதனையாக இருந்த நிலையில் அதனை கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்துள்ளார். மேலும் 200 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை இவர் விரைவில் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.