Homeசெய்திகள்விளையாட்டுஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் தமிழக இளம் வீரர் சாய்...

ஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் சேர்ப்பு!

-

ஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் மாற்று வீர்ராக தமிழக இளம் வீரராக சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

வருகிற ஜுன் 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் ஜிம்பாவே மற்றும் இந்தியா அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் மோத உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இடது கை ஆட்டக்காரர் சாய் சுதர்ஷன் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்டது.

இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மாலை 4.30 மணி அளவில் தொடங்குகிறது. இதில் இந்திய அணியானது இளம் வீரர் ஷுப்மன் கில் தலைமையிலான இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்று இருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகியோர் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ளனர். அவர்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று இருந்தனர். இந்நிலையில அவர்கள் புயல் காரணமாக அவர்கள் ஜிம்பாப்வே சென்றுள்ள அணியுடன் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு மாற்றாக முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான அணியில் சாய் சுதர்ஷன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்) , ஹர்ஷித் ராணா. ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் 22 வயதான சாய் சுதர்ஷன், இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக களம் கண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ