Homeசெய்திகள்விளையாட்டுசர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா, விராட் கோலி ஒய்வு!

சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா, விராட் கோலி ஒய்வு!

-

சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா, விராட் கோலி ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியானது மேற்கிந்திய தீவுகளில் உள்ள கென்னிங்க்ஸ்டன் ஒவல் பார்படாஸ் மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. இதில் இந்திய முதலாவது பேட்டிங்கில் 176 ரன்கள் எடுத்தது. பின்னர் 177 ரன்கள் இலக்குடன் இரண்டாவது பேட்டிங் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 169 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். போட்டி முடிந்த பிறகு பேசிய விராட் கோலி எதை அடைய நினைத்தோமோ அதை அடைந்துள்ளோம். என்னுடைய கடைசி டி20 உலக கோப்பை இது தான் என்றார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் இந்திய அணிக்காக என்னுடைய எனது கடைசி டி20 போட்டி இதுதான். இந்தியாவுக்காக கோப்பையை வென்றுவிட்டு ஓய்வை தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன். தற்போது அதை வென்றுவிட்டேன். குட்பை சொல்லும் நேரம் இது. தொடர்ந்து ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளயாடுவேன் எனத் தெரிவித்தார்.

MUST READ