
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி
வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழக வீரர் ஒருவர் கூட இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக, சுழற்பந்து வீச்சில் சிறப்பாக செயலாற்றி வரும் தமிழக வீரர் அஸ்வினைத் தேர்வு செய்யாதது பேசும் பொருளானது. இந்த நிலையில், உலகக்கோப்பைத் தொடருக்கு தேர்வான அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் தொடரில் இருந்து வெளியேறினார்.
நாய் நன்றியுள்ளது- மனிதனோடு ஒப்பிடாதீர்
இதனால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.