Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஜிம்பாவே அணி டாஸ் வென்று பந்துவீச்சு

இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஜிம்பாவே அணி டாஸ் வென்று பந்துவீச்சு

-

இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஜிம்பாவே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டமானது ஜிம்பாவேவில் உள்ள ஹாரரே மைதானத்தில் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. போட்டியில் இந்திய அணியானது சுப்மான் கில் தலைமையிலும் ஜிம்பாவே அணியானது சிக்கந்தர் ராசா தலைமையிலும் களம் கண்டன. இப்போட்டியில் ஜிம்பாவே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி இதற்கு அடுத்த நாளில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இந்திய அணி ஜிம்பாவே அணியிடம் 5வது டி20 போட்டியில் இன்று விளையாடுகிறது. இங்கு நடைபெறும் போட்டிகள் அனைத்தும் ஜிம்பாவேவில் உள்ள ஹாரரே மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர் தோல்வியிலிருந்து விடுபட்டு ஜிம்பாவே அணி இப்போட்டியில் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். அதே சமயம் இந்திய அணியானது தங்களது வெற்றிப்பயணத்தை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

 

MUST READ