வாரணம் ஆயிரம் தெலுங்கு வெர்ஷனுக்கு கிடைத்த வரவேற்பால் சூர்யா மிகவும் உற்சாகமடைந்துள்ளார்.
தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியானது வாரணம் ஆயிரம் திரைப்படம்.
அந்தப் படத்தில் சூர்யா இளைஞராக, ராணுவ வீரராகவும் வயதான அப்பாவாகவும் என பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியிருந்தன. படத்தின் பாடல் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
தமிழ் சினிமாவின் கிளாசிக் என்ற பட்டியலில் இணைந்து தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது இந்தப் படம். இந்நிலையில் வாரணம் ஆயிரம் திரைப்படம் தெலுங்கு ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பாடல்கள் வரும்போது இசை கச்சேரி போல ரசிகர்களும் சேர்ந்து பாடுகின்றனர். படத்தின் ரீரிலீசுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சூர்யாவும் இதனால் மகிழ்ச்சியடைந்து அதனை பகிர்ந்து உள்ளார்.
“படத்திற்கு கிடைத்த அன்பு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. படத்தை கொண்டாடிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நீங்கள் தான் மிகச் சிறந்த ரசிகர்கள்” என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
This love is a huge surprise!!!
A big thank you from team #SuriyaSonOfKrishnan
Awestruck – you guys are the best!! ❤️ pic.twitter.com/N2zrxpmKrp— Suriya Sivakumar (@Suriya_offl) August 5, 2023