Homeசெய்திகள்தமிழ்நாடுவங்கக்கடலில் செப். 5-ல் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் செப். 5-ல் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகிறது

-

- Advertisement -
வங்கக்கடல் பகுதிகளில் வரும் 5-ஆம் தேதி புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகும் என்றும், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும்,  மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், செப்டம்பர்  5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Rain
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

MUST READ