Homeசெய்திகள்தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.11.93 ரொக்கப்பணம் பறிமுதல்

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.11.93 ரொக்கப்பணம் பறிமுதல்

-

தமிழகத்தில் இன்று 6 இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சிலவற்றில் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம்  திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கடலூர் மாவட்டம் காடம்புலியுர்,திருவள்ளுர் ஆகிய இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் கணக்கில் வராத 11 லட்சத்து, 93 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

MUST READ