Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 6 ஆண்டுகளில் 244 ரவுடிகள் படுகொலை...

தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 244 ரவுடிகள் படுகொலை…

-

- Advertisement -

தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் கொலைகள் நடக்கின்றன. ரவுடிகள் பழிக்கு பழி வாங்கப்படுகின்றனர். கடந்த 6 ஆண்டுகளில், 8,860க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக வெளியான புள்ளிவிவரம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 244 ரவுடிகள் படுகொலைகுடும்ப வன்முறை, தகாத உறவு, காதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொலைகள் நடந்திருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். இதில் குழு மோதல், அரசியல் காரணங்கள், முன்விரோதம் & பழிவாங்கல் முயற்சியில் 244 ரவுடிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள ரவுடிகளை, உளவு போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீசாரும், ரவுடிகள் ஒழிப்பு போலீசாரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ