Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!

சென்னையில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!

-

TASMAC - டாஸ்மாக்

திருவள்ளுர்வர் தினம், குடியரசு தினம் உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு சென்னையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருவள்ளுவர் தினமான ஜன.16, வடலூர் ராமலிங்கர் நினைவு தினமான ஜன.25, குடியரசு தினமான ஜன .26 ஆகிய 3 தினங்களும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல் 1) மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதை சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல் பார்கள் மற்றும் எப்எல் 3ஏ, ஏஏ,மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் இந்த 3 நாட்களில் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அந்த மூன்று நாட்களும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ