Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரி தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

புதுச்சேரி தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

-

புதுச்சேரி தனியார் விடுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உளளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன் (50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுதர்சன் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். பின்னர் புதுச்சேரி நகர பகுதியான முத்துமாரியம்மன் கோயில் வீதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை முதல் சுதர்சன் குடும்பத்தினர் தங்கியிருந்த அறை திறக்காமல் இருந்துள்ளது.

130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்

இதனால் சந்தேகமடைந்த விடுதி பணியாளர்கள் அறைக்கதவை தட்டியுள்ளனர். ஆனால் அறைக்கதவு திறக்கவில்லை. இதனால் விடுதி நிர்வாகிகள், மாற்று சாவி கொண்டு கதவை திறந்து பார்த்தபோது சுதர்சன், அவரது மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சேரி பெரிய கடை காவல்துறையினர் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ