Homeசெய்திகள்ராமநாதபுரம் அருகே அரசுப்பேருந்து மீது கார் மோதி விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்...

ராமநாதபுரம் அருகே அரசுப்பேருந்து மீது கார் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

-

ராமநாதபுரம் அருகே அரசுப்பேருந்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் ராஜேஷ். நகை கடை உரிமையாளரான இவருக்கு திருமணமாகி பாண்டிசெலவி என்ற மனைவியும்,  தர்ஷாலா ரணி (8), பிரணவிகா (4) மற்றும்  3 மாத குழந்தை உள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ் தனது குழந்தைகள் மற்றும் மாமனார் – மாமியார் ஆகியோருடன் ராமநாதபுரத்தில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு அதிகாலை தங்கச்சிமடத்திற்கு திரும்பி கொண்டிருந்தார்.

தனியாா் வாகனம் மோதி பெண் தொழிலாளி பலி

உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையோரம் நின்ற அரசுப்பேருந்தின் மீது கார் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் ராஜேஷ், அவரது 2 மகள்கள் மற்றும் மாமனார் – மாமியார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் சபரி பிரிட்டோ, ராஜேஸ் மனைவி பாண்டிச் செல்வி, அவரது 3 மாத குழந்தை ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தில் பலியானவர்களின் உடல்களை  கைப்பற்றி உச்சிப்புளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ