Homeசெய்திகள்தமிழ்நாடுநீதிமன்றத்தை திட்டமிட்டு ஏமாற்றிய நிலக்கோட்டை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதி உத்தரவு

நீதிமன்றத்தை திட்டமிட்டு ஏமாற்றிய நிலக்கோட்டை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதி உத்தரவு

-

நீதிமன்றத்தை திட்டமிட்டு ஏமாற்றிய நிலக்கோட்டை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதி உத்தரவுதிண்டுக்கல் மாவட்டம்  பள்ளபட்டி தெற்குதெருவைச் சேர்ந்த மணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தாக்கல் . என் தந்தையின் மறைவுக்கு பின் பள்ளபட்டியில் உள்ள அவரது சொத்துக்களை நான் அனுபவித்து வருகிறேன். இந்த நிலத்தில் எனக்கும், என் தம்பிக்கு சரிபாதி உரிமை உள்ளது. இந்த சொத்துக்கள் பாகப் பிரிவினை செய்யப்படவில்லை. ஆனால், என் தம்பி, பாகப்பிரிவினை செய்யாத நிலத்தில்  சரிபாதி என குறிப்பிட்டு வேறு நபர்களுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார்.

ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அடிக்கடி நிகழும் இரயில் விபத்துகள் – கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

இந்த கிரைய ஆவணத்தில் நீளம், அகலம்,  என எதுவும் குறிப்பிடப்படவில்லை. கிரையம் செய்த நபர் பெயரில் பட்டா வழங்குவதற்கு உட்பிரிவுசெய்ய நான் ஆட்சேபம் தெரிவித்தேன். ஆனால், அதிகாரிகள் அவருடன் சமரசமாக செல்லுமாறு என்னை கூறுகின்றனர். இது தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கில் பட்டா மாறுதலுக்கு உட்பிரிவு செய்யக் கூடாது என உத்தரவானது.

நீதிமன்றத்தை திட்டமிட்டு ஏமாற்றிய நிலக்கோட்டை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதி உத்தரவுஆனால், முன்தேதியிட்டு பட்டா உட்பிரிவு செய்தது போல ஆவணம் தயாரித்து, பட்டா கொடுத்துள்ளனர். இது சட்டத்திற்கும், நீதிமன்ற உத்தரவிற்கும் எதிரானது. எனவே, பட்டா உட்பிரிவுசெய்த உத்தரவையும், பட்டாவையும் ரத்து செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவு:

ஒரு அரசு ஊழியர் சட்டத்தின் ஆட்சியை மதிக்காதவர்களுடன் இணைந்து ஆவணங்ளை திருத்துவது மட்டுமின்றி, நடைமுறைகளையும் எவ்வாறெல்லாம் கையாள முடியும் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணமாகும்.

இந்த வழக்கோடு தொடர்புடைய ஆவணங்களை பார்க்கும் போது நிலக்கோட்டை தாசில்தாரால் இந்த நீதிமன்றத்தில் தவறான பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, பொய் சாட்சியம் அளிக்க முயன்றதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை துவங்கும் போதே பொய்யான குற்றச்சாட்டிற்கு போதுமான முகாந்திரம் இருந்தால் அதில் திருப்தி கொள்ளலாம்.

இது தொடர்பான உத்தரவுகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன, இந்த உத்தரவுகளை உருவாக்குவதில் தாசில்தாரின் பங்கு உள்ளிட்டவை நிரூபிக்கப்பட்டவை. சட்டப்படியான அரசு பொது ஊழியர் ஒருவர் பொது நீதிக்கு எதிராக ஆவணங்களை கொடுப்பதும் சட்டப்படி தவறு தான்.

இந்த வழக்கில் தாசில்தார் தனது பிரமாண வாக்குமூலத்தில் பொய்யான தகவலை கூறியுள்ளார் என்பது நிரூபணமானது. அரசு பொது ஊழியரான அவர், தனது சட்டப்படியான கடமைகளில் இருந்து விலகி தனிநபர்களுக்காக நேர்மையின்றி செயல்பட்டுள்ளார். இதுபோன்ற செயல்களை கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. அவர், இந்த நீதிமன்றத்தையும் தவறான வழிநடத்த முயன்றுள்ளார்.

பட்டா வழங்கலுக்கான உட்பிரிவு தொடர்பான அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது. நிலக்கோட்டை தாசில்தார் மீது திண்டுக்கல் கலெக்டர் உடனடியாக துறைரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் துணை பதிவாளர்  மூலம் மதுரை ஜேஎம் 6வது நீதிமன்றத்தில் வழக்க தொடர வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை அக்டோபர் – 24ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

MUST READ